அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46% ஆக உயர்வு – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில் அரசு ஊழியர்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட்ட அகவிலை படியை பெறுவார்கள்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை அதாவது ஜனவரி முதல் ஜூன் மாதம் மற்றும் ஜூலை முதல் டிசம்பர் வரையிலான மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. கடந்த மாதங்களின் பணவீக்கம் மற்றும் ஏ ஐ சி பி ஐ குறியீட்டு விகிதங்களின் படி அகவிலைப்படி உயர்வானது நிர்ணயிக்கப்படுகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயரும். இதைப் போலவே அரசு ஊழியர்களுக்கான மற்ற பண பலன்களும் உயர்த்தப்படுகிறது. இறுதியாக கடந்த மார்ச் மாதத்தில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தற்போது வரை 42 சதவீதமாக இருக்கிறது.
இன்று மாநிலம் முழுவதும் பேருந்துகள் இயங்காது – நாளை என்ன நடக்கும்?
புதிய அகவிலைப்படி உயர்வு நான்கு சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்றும், அதன் மூலம் 46 சதவீத அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வரும் செப்டம்பர் மாதம் பண்டிகை கால சமயங்களில் வெளியிடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.