அனைத்து துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்கள் – எந்த வேலையும் இனி நிரந்தரம் இல்லை !!!!
அனைத்து தொழில் துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமித்து கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் தற்போது அனைத்து பணியிடங்களும் ஒப்பந்த அடிப்படையிலேயே நிரப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகிறது. பெரு முதலாளிகளின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
மத்திய அரசானது வேலை தேடுவோருக்கு ஒப்பந்த பணிகள் மற்றும் குறுகிய காலகட்டத்தில் அல்லது குறிப்பிட்ட காலகட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளது மேலும் இது குறித்த அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. ஆனால் எந்த வேலை வழங்கப்பட்டாலும் அது நிரந்தரமாக இருக்காது. பெரு முதலாளிகளுக்கு உதவிடும் நோக்கில் மத்திய அரசு இவ்வாறு செயல்படுவதாகவும் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவிக்கினறன.
அதே போல் நிரந்தர பணியாளர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்தை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் வைத்திருப்பது போன்ற அமல்களை மத்திய தொழில்துறை தற்போது அறிவித்து உள்ளது. இதனால் இனி நிரந்தர பணியிடம் என்ற ஒரு வாய்ப்பிற்கு இடமே இல்லை என்ற நிலைதான் நீடிக்கும் போலிருக்கிறது.
கடந்த 1946ம் ஆண்டின் தொழில்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு அனைத்து துறைகளிலும் ஒப்பந்த ஊழியர்களை மட்டுமே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என மாற்றப்பட இருக்கிறது. அதாவது இது வரை உணவு பாதுகாப்பு மற்றும் ஆடை உற்பத்தி ஆகியவற்றில் இருந்த ஒப்பந்த முறை இனி அனைத்து துறைகளிலும் கொண்டு வரப்பட உள்ளது.
வேலை, சம்பளம், சலுகைகள் போன்றவை நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரே விதத்தில் கொடுக்கப்பட்ட வேண்டும் என்றும் ஒப்பந்தம் முடிந்த பின் பணியில் இருக்க தகுதியினை இழந்து விடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 3 மாதங்கள் மட்டுமே பணிபுரிபவராக இருந்தாலும் ஒப்பந்தம் முடிவதற்கு 2 வாரங்களுக்கு முன்னதாகவே நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்