ஒரே நாளில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
கடந்த வாரம் முழுவதுமே தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.144 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் ஏற்ற, சரிவு காரணத்தினால் தங்கத்தின் விலையில் தொடர்ந்து மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த மே மாத இறுதியில் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் தங்கத்தின் விலை அதிகரிக்க துவங்கியிருக்கிறது. நேற்று சென்னையில் 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து 6081 ரூபாய்க்கும், சவரனுக்கு 128 ரூபாய் குறைந்து 48,648 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
சிபிஎஸ்இ பாட புத்தகங்களில் இந்த பகுதிகள் நீக்கம் – அதிகரிக்கும் சர்ச்சை!
நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்திருக்கிறது. அதாவது சென்னையில் இன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து 6099 ரூபாய்க்கும், தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 144 அதிகரித்து 48,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயர ஆரம்பித்திருப்பதால் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், நேற்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 77.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் அதிகரித்து வெள்ளியின் விலை கிராமுக்கு 78.60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.