தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

0
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - அமைச்சர் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் வெளியிட்ட முக்கிய உத்தரவு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். மேலும் இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டு தகுதியான நபர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதி உள்ளவர்களுக்கு விரைவில் நகைகள் ஒப்படைக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நகைக்கடன் தள்ளுபடி

தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விதி 110 இன் கீழ் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயத்திற்காக 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் நகைக்கடன் தள்ளுபடியில் ஏராளமானோர் முறைகேட்டில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. அதனால் பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இதில் போலி நகைகளை கொண்டு அடமானம் வைத்து நகைக்கடன் பெறுவது, ஒரு நபர் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல்வேறு வகையான முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுக்கு வங்கி அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் நகைக்கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களை பரிசீலனைக்கு உட்படுத்தி தகுதியான நபர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் நகைக்கடனுக்கு 48 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் விண்ணப்பித்தவர்களில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதில் நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தமிழகத்தில் இதுவரை 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் 5.48 லட்சம் பேருக்கு நகைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். அத்துடன் தள்ளுபடி பெற தகுதியான அனைத்து நபர்களுக்கும் வருகிற 28ம் தேதிக்குள் நகைகள் திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!