சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 உயர்ந்துள்ளது. நேற்று சரிவடைந்த தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர். தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தின் விலை:
கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு முதல் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கொரோனா பரவல் குறைந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கியதும் தங்கம் விலை குறையும் அப்போது நகை வாங்கி கொள்ளலாம் என்று நகைப்பிரியர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் அடுத்தடுத்து கொரோனா இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலையின் தாக்கத்தினால் தங்கத்தின் மீதான முதலீடு மேலும் அதிகரித்தது. தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது வரை தங்கம் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? பிரதமர் மோடிக்கு ஆலோசனை!
கொரோனா ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடு காரணமாக ஏற்பட்ட தொழில் சரிவு தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்த நிலையில், அடுத்ததாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற தொடங்கிய ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் இதனால் ஏற்பட்ட பங்கு சந்தை சரிவால் தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது ரூ.36,000 ஆக இருந்த தங்கம் விலை தற்போது 40,000 ஆக உள்ளது. இந்த நிலையில் இன்று ரூ. 296 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,648-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,831-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கிராமுக்கு 40 பைசா அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 72.80க்கும் விற்பனை விற்பனை செய்யப்படுகிறது. நேற்று சரிவடைந்த தங்கத்தின் விலை சற்று ஆறுதல் அளித்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.