TN TRB தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு – பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு!
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வான 95 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற மார்ச் 28, 29, 30 ஆகிய தேதிகளில் இந்த பயிற்சிக்கான வகுப்புகள் நடைபெற இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு:
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகம் இருந்த காரணத்தால் மாநிலம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மிகவும் கட்டுப்பாடான நிலையில் இருந்தது. மேலும் இந்த ஊரடங்கின் காரணமாக அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களின் படிப்புக்கு கேடு வந்து விடக் கூடாது என்று இணையதளம் மூலம் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வந்தது. இவ்வாறு சென்று கொண்டிருந்த நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று சற்று குறைய ஆரம்பித்ததால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப் பட்டது. இந்த நிலையில் சென்ற வருடம் பொது தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் இந்த ஆண்டு கட்டாயமான முறையில் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்று கூறி அதன் தேதியையும் அறிவித்து உள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் வெளியிட்ட முக்கிய உத்தரவு!
இது மட்டுமல்லாமல், அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. TNPSC சார்பில் குரூப் 2, 2A மற்றும் குரூப் 4, VAO தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தவிர தனியார் துறையும் தங்கள் சார்பில் வேலைவாய்ப்புகளை தெரிவித்து வருகிறது. இதனால், பட்டதாரிகள் கலந்து கொண்டு வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம் என்றும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வான 95 வட்டார கல்வி அலுவலர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வட்டார கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அளித்த முக்கிய அறிவிப்பு என்னவென்றால், அந்த அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும் அந்த பயிற்சிகள் வருகின்ற மார்ச் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக அறிமுக கூட்டம் 3 நாட்கள் நடைபெறும்.