சென்னை: இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!
தமிழகத்தில் தங்கத்தின் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொடுகிறது. அதனால் நகைப்பிரியர்கள் தங்கத்தை வாங்குவதில் தயக்கம் காட்டி வந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
தங்க விலை
தமிழகத்தில் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தாங்கள் சேமித்த பணத்தை சிறந்த வருமானம் வரும் வகையில் வங்கி, அஞ்சல் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் அறிமுகப்படுத்தப்படும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தங்கத்தின் மீதும் பெரும்பாலானோர் தங்களின் சேமிப்பு பணத்தை முதலீடு செய்யத் தொடங்கினர். அத்துடன் வெளிநாட்டினர்களும் தங்கத்தின் மீது அதிகமாக முதலீடு செய்வதால் அதன் தேவை அதிகரித்து அதன் விலையும் தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது.
தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!
மேலும் தற்போது ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கிடையே ஏற்பட்ட போர் காரணமாக டீசல், பெட்ரோல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து ஒரு சவரம் தங்கம் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர்வு நகைப்பிரியர்கள் மத்தில் பேரிடியாக விழுந்தது. தற்போது சற்று குறைந்து கொண்டும் சில சமயங்களில் அதிகரித்து கொண்டும் வருகிறது. அதனால் நகைப்பிரியர்கள் எப்பொழுது நகைகளை வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
Exams Daily Mobile App Download
தற்போது மாலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,846க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல் சவரனுக்கு ரூ.104 குறைந்து ரூ.38,768க்கு விற்பனையாகிறது. மேலும் தங்கம் விலை இனி வரும் காலங்களில் ஏற்றத்தோடு இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதனால் இப்பொழுதே தங்க நகைகளை வாங்க விரும்புவர்கள் வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து ரூ.66.10க்கும் அத்துடன் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,100க்கும் விற்பனையாகிறது.