தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

0
தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிர்ச்சியில் பொதுமக்கள்!
தீவிரமடையும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிர்ச்சியில் பொதுமக்கள்!

சுமார் இரண்டு ஆண்டுகளாக உலகை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்த கொரோனா தொற்று இன்னும் நம்மை விட்டு முழுமையாக போகவில்லை. கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் இன்னும் இந்த தொற்றின் வீரியம் உள்ளது. இதனால் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

ஊரடங்கு அமல்:

நாடு முழுவதும் அதிக பேரழிவை ஏற்படுத்திய கொரோனா தொற்று கடந்த 2019 ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்டது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீன சுகாதாரத்துறை பல கடுமையான ஊரடங்குளை பிறப்பித்தது. இதன் பலனாக கொரோனா தாக்கம் குறைந்தது. இருப்பினும் அந்த சமயத்தில், கொரோனா பரவல் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தீவிரமாக பரவத் தொடங்கின. இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத் துறையும் திணறி வந்தது. மேலும் இதை கட்டுப்படுத்த ஒரே ஆயுதம் தடுப்பூசி என்பதை அறிந்து, இரண்டு வகையான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு உலக நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மற்ற நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும் இந்த நிலையில், கொரோனா பிறப்பிடமான சீனாவில் கடந்த 2 மாதங்களாக நோய்த்தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கொரோனா தொற்று தலைநகர் பெய்ஜீங், ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில் கோரத் தாண்டவமாடி வருகிறது. இதை கட்டுப்படுத்த சீன அரசு முழு மூச்சில், ஊரடங்கு நடவடிக்கையை கையில் எடுத்து உள்ளது. சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் நகர் மக்களுக்கு தான், அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காயில் 3,947 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைநகர் பெய்ஜிங்கில், அதிகாரிகள் மிகப்பெரிய நகர மாவட்டத்தை மூடிவிட்டனர். இதனால் பெய்ஜிங் அரசு அனைத்து குடியிருப்பாளர்களையும் தினசரி சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்த முழு ஊரடங்கு காரணமாக சீனாவின் ஏற்றுமதி வளர்ச்சி அதிக வீழ்ச்சியை சந்தித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஊரடங்கின் பலனாக ஷாங்காய் நகரில் பாதிப்பு குறைந்து வருவதாகவும், இருப்பினும் ஊரடங்கில் எந்த தளர்வும் அளிக்கப்படாமல் சீன அரசு இன்னும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!