ஜூலை 19 வரை தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு கோவா மாநில அரசு கூடுதல் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு உத்தரவினை ஜூலை 19 வரை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் வழங்கப்பட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
ஊரடங்கு நீட்டிப்பு:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை நிலவரத்திற்கு ஏற்ப ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டுகிறது. இந்நிலையில் கோவா மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள முழு ஊரடங்கை கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 19ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
தமிழக அரசு ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – அரசாணை வெளியீடு!
- கடைகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட வேண்டும். இந்த நேரத்தில் மதுபானம் தவிர அனைத்து பொருட்களின் டோர் டெலிவரியும் அனுமதிக்கப்படும்.
- பயணியர் கப்பல்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கேசினோக்கள் மூடப்பட்டிருக்கும்.
- ஷாப்பிங் மால்களில் அமைந்துள்ள ஸ்பா மசாஜ் பார்லர்கள், தியேட்டர்கள், மல்டிபிளெக்ஸ், பொழுதுபோக்கு பகுதிகளும் மூடப்படும்.
- பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படும். அரசாங்கத்தின் முன் அனுமதியுடன் கல்லூரித் தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகள் நடத்த அனுமதிக்கப்படும்.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி அனைத்து சமூக, அரசியல், கலாச்சார, கல்வி நிகழ்வுகள் தடை செய்யப்பட்டுள்ளன.
- முன் அனுமதியுடன் 100 விருந்தினர்கள் அல்லது 50% திறனுடன் திருமணங்களை நடத்தலாம்.
- எந்தவொரு இடத்திலும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூட அனுமதி இல்லை.
- மருந்துகள் மற்றும் மருத்துவம் சம்மந்தப்பட்ட பொருட்கள் விற்கும் கடைகள் திறந்திருக்கும்.
- பார்கள் மற்றும் உணவகங்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை 50% இருக்கை திறனுடன் திறக்க அனுமதிக்கப்படும்
- பேருந்துகள் 50% பயணிகள் திறனுடன் இயக்க அனுமதிக்கப்படும்
- ஜிம்கள் 50% திறனில் செயல்பட அனுமதிக்கப்படும், மேலும் விளையாட்டு வளாகங்கள் பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படும்
- 15 பார்வையாளர்களுடன் மத வழிபாட்டு இடங்கள் திறக்க அனுமதிக்கப்படும்.
- வங்கிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது பயன்பாட்டு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்படும்
- அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தொலைத்தொடர்பு சேவைகளும் திறக்க அனுமதிக்கப்படும்.