பொதுமக்கள் கவனத்திற்கு.. ரூ. 500க்கு சிலிண்டர் விற்பனை – சூடுபிடிக்கும் தேர்தல் களம்!
லோக்சபா தேர்தலில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்து வருகிறார்.
கேஸ் சிலிண்டர்
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பிரச்சாரம் பரபரப்புடன் நடைபெற்று வருகிறது. பல முக்கிய அரசியல் கட்சிகள் மக்களை கவர பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். அதற்கு போட்டியாக எதிர் கட்சியினர் வாக்குறுதிகளை வழங்குகின்றனர். எனவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து அமைச்சர் உதயநிதி பரப்புரை செய்துள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அதில் INDIA கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரூ. 500க்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் முதல்வரின் காலை உணவு திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றனர் என தெரிவித்தார். அதே போல சேலம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தால் 20 ஆயிரம் மாணவிகள் பயன்பெற்றுவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.