நாட்டில் மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!
நமது அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, அமலில் உள்ள முழு ஊரடங்கை மறு உத்தரவு வரும் வரை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
முழு ஊரடங்கு:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. இந்நிலையில் தற்போது தான் சீனா ஊரடங்கில் இருந்து வெளிவந்த இயல்பு நிலைக்கு திரும்பியது. தற்போது கொரோனா தொற்று மீண்டும் அதிகமாகி விட்டதால் சீனா மீண்டும் லாக்டவுனைக் கொண்டு வந்துள்ளது. வீடு வீடாக சென்று டெஸ்ட் போன்ற பல நடவடிக்கைகளை செய்து வருகிறது.
TET நிபந்தனை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பாரபட்சம் வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை!
இந்நிலையில், சீனாவில் மீண்டும் தலை தூக்கிய கொரோனா பரவல் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஷாங்காய் நகரில் மட்டும் 75 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அறியப்பட்டு உள்ளது. மேலும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளுவது மக்களை பயமடைய செய்து உள்ளது. மேலும் இதுவே கொரோனா பரவல் தொடங்கியதில் இருந்து அதிகபட்ச எண்ணிக்கை என்றும் கூறியுள்ளனர்.
அதனால் ஷாங்காய் நகரில், கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே செல்வதால், அங்கு உள்ள குடியிருப்புப் பகுதிகள் கொரோனா தனிமைப்படுத்தும் இடங்களாக மாற்றப்பட்டு விட்டன. மேலும், பள்ளிகள், கல்லூரிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு உள்ளன. முழு ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிப்பதாக சமூக வலைதளங்களில் மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒருசிலர் ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அரசு பேருந்தில் மகளிருக்கு 50% கட்டண சலுகை – மாநில அரசின் சூப்பர் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து போலீசார் தரப்பில் இருந்து, கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தற்போதைக்கு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்படாது என்றும், ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்து விட்டனர். இதனால் மக்கள் கடும் பீதியில் இருந்து வருகின்றனர்.