TET நிபந்தனை ஆசிரியர்கள் கவனத்திற்கு – பாரபட்சம் வேண்டாம் என்று அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட கட்டாய கல்விக்காக 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச தகுதியாக கட்டாயமாக்கப்பட்டது. இவ்வாறு வேலை செய்யும் ஆசிரியர்களுக்கு கருணை காட்டுமா தமிழக அரசு என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
நிபந்தனை ஆசிரியர்கள்:
தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஆசிரியர் பணிக்கு தகுதித்தேர்வு அவசியம் என்று தமிழக கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளிவந்தது. அதன் பின்னர் மத்திய அரசு சட்டம் இயற்றி பின்பு, தமிழக அரசு, பழைய நடைமுறைப்படி தான் ஆசிரியர்களை நியமித்தது. ஆனால், ஆர்.டி.இ சட்டத்தை ஏற்ற பின், டெட் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள், அரசுப் பணியில் தொடர வாய்ப்பில்லை என்றும் அறிவித்து இருந்தது.
10வது படித்தவர்களுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் Clerk வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
அதனை தொடர்ந்து அதற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, அரசு பள்ளி மற்றும் சிறுபான்மை பள்ளிகளில் பணிபுரிவோர் விலக்கு பெற்றனர். இவர்களுடன் பணியில் சேர்ந்த அரசு உதவிபெறும் சிறுபான்மையற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும், விலக்கு வழங்காமல் இழுத்தடிக்கப்படுகிறது. மாநிலம் முழுக்க, ஆசிரியர்களே டெட் நிபந்தனையில் இருந்து விலக்கு கோருவதால், சிறப்பு தேர்வு அல்லது பணியிட பயிற்சிகள் வழங்கப்படும் என, கல்வித்துறை சார்பில் கூறிவந்தனர்.
10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வில்லாமல் அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் இருக்கும் அனைவரும் இந்தியர்கள் தான். ஏன் இவ்வாறு கல்வியில் பாரபட்சம் பார்த்து நடந்து கொள்கிறீர்கள் என்றும், கல்வி என்பது அனைவருக்கும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த கட்டாய இலவச கல்வி உரிமத்திலேயே திருத்தம் கொண்டு ஆசிரியர்களுக்கு இருக்கும் பாரபட்சமான முறைக்கு ஒரு முடிவு கொண்டு வாருங்கள் என்று ஆசிரியர்கள் சார்பில் கூறப்பட்டு உள்ளது.