மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

0
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு அதிரடி நடவடிக்கை!
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் - அரசு அதிரடி நடவடிக்கை!
மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – அரசு அதிரடி நடவடிக்கை!

இலங்கையில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், ரம்புக்கனை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் மோதலில் இறங்கியதால் அங்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முழு ஊரடங்கு

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடிகள் நிலவி வரும் சூழலில் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்போது அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கண்டித்து ராஜபக்சே அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்கும் இலங்கை அரசின் தீர்மானத்திற்கு எதிராக ரம்புக்கனை பகுதியில் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

TCS சென்னை நிறுவனத்தில் வேலை – விண்ணப்பிக்கும் முழு விவரங்களுடன் !

அந்த வகையில் கடந்த ஏப்ரல் 18ம் தேதியன்று துவங்கி சுமார் 15 மணி நேரங்கள் நடைபெற்ற இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் விதமாக இலங்கை போலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் போலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் மறு அறிவித்தல் வரும் வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – IT நிறுவனங்களில் சூப்பர் வாய்ப்பு!

இதற்கு முன்னதாக, நேற்று (ஏப்ரல்.19) பிற்பகல் இலங்கையின் ரம்புக்கனா நகரில் போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் இறந்ததாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. இது குறித்து வெளியான வீடியோக்களில், போராட்டக்காரர்கள் காயமடைந்தவர்களை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதைக் காண முடிந்தது. மேலும் இந்த சம்பவத்திற்கு, காவல்துறை மீது பலர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து இந்த கலவரத்தை தடுக்கும் விதமாக ரம்புக்கனை போலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!