தமிழகத்தில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – IT நிறுவனங்களில் சூப்பர் வாய்ப்பு!
தமிழகத்தில் தற்போது வேலை இல்லாமல் தவித்து வரும் இளைஞர்களுக்கு மாநிலத்தில் இருக்கும் IT நிறுவனம் வேலைவாய்ப்புகளை அறிவித்து உள்ளனர். மேலும் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவித்து உள்ளனர்.
IT நிறுவனத்தில் வேலை:
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக 2020 ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப் படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் சார்பில் பொதுத் தேர்வுக்கான தேதிகளையும் அறிவித்து உள்ளனர்.
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான கூகுள், அடோப், ஜூனிபர் நெட்வொர்க்ஸ், மைக்ரோசாப்ட், இன்டெல், சிஸ்கோ, இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், அமேசான் ஆகிய நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அறிவித்து உள்ளனர். மேலும் இது பிரெஷர்களுக்கும் நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஐடி நிறுவனங்களை விட அதன் ஊழியர்களுக்கு நாற்பது சதவீதம் அதிக ஊதியம் வழங்குவதாக கணிக்கப்பட்டுள்ளது. கூகுளில் பணிபுரியும் புரோகிராமர்கள் மற்றும் மென்பொருள் பொறியாளர் பிரெஷர்களுக்கு 5 முதல் 38 லட்சம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும்.
TNPSC இம்மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய 4 வேலைவாய்ப்பு தேர்வுகள் – முழு விவரம் இதோ!
மேலும் இது தவிர அடோப் நிறுவனம் பிரெஷர்களுக்கு ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 15 லட்சம் வரை சம்பளம் வழங்குகிறது. மேலும், சில வருட அனுபவத்திற்குப் பிறகு சம்பள உயர்வு 2 மடங்கு வரை அதிகரிக்கலாம். அதனை தொடர்ந்து மேலே குறிப்பிட்ட அனைத்து IT நிறுவனங்களும் தங்களின் வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. அதனை படித்து முடித்து வேலை இல்லாமல் தவிக்கும் மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளனர்.