தமிழகத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கிய புஜி எலக்ட்ரிக் நிறுவனம் – 250 பேருக்கு வேலைவாய்ப்பு!
இந்திய நிறுவனமான புஜி எலக்ட்ரிக் 150 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருக்கிறது
புதிய நிறுவனம்
தொழில்துறை ஆட்டோமேஷனில் முன்னணியில் இருக்கும் இந்திய நிறுவனமான ஃபுஜி எலக்ட்ரிக் 150 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன தொழிற்சாலையை தமிழகத்தில் திறந்து வைத்துள்ளது. இந்த தொழிற்சாலை நகரின் பழைய மகாபலிபுரம் சாலையில் பெருங்குடியில் 65,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் சிமெண்ட் உற்பத்தியில் ஈடுபடும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான டிரைவ்கள் மற்றும் பிற உதிரிபாகங்கள், அத்துடன் வெப்பமாக்கல், காற்றோட்டம் மற்றும் ஏர் கண்டிஷனிங் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
பொது போக்குவரத்தில் பெண்களின் பாதுகாப்பிற்காக ‘MORTHIndia’ திட்டம் – மத்திய அமைச்சர் தகவல்!
இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி சிவாஜி வாக்மரே கூறுகையில் இந்த புதிய வசதி, எங்கள் செயல்பாடுகளின் அனைத்து அம்சங்களையும் மேம்படுத்துவதற்கும், தொழில்துறையில் சிறந்த ஒன்றாகத் திகழ்வதற்கும் எங்களது முயற்சிகளுக்கு சான்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் புதிய தொழிற்சாலைக்கு 250க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்த இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download