பிப்.,22 முதல் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் – மாநில கல்வி அமைச்சர் அறிவிப்பு!!
பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 22ம் தேதி முதல் பள்ளிகளுக்கான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மாநில கல்வி அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கல்வித்துறை அமைச்சர்:
கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கிற்கு பின்னர் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ள நிலையில் அவர்களுக்கான மாதிரி தேர்வுகள் நடத்துவது குறித்தும், பள்ளிகளில் நேரம் மாற்றியமைக்கப்பட உள்ளது குறித்தும் மாநில கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா அவர்கள் கடந்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீதிமன்ற ‘பியூன்’ 13 காலிப்பணியிடங்கள் – 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
அறிவிப்பு:
அமைச்சரின் அறிக்கையில், பிப்ரவரி 22ம் தேதி முதல் தொடக்க பள்ளிகள் காலை 9 மணி முதல் 3 மணி வரையும், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் காலை 9 மணி முதல் மாலை 3:20 மணி வரையிலும் செயல்படும் என்று கூறினார். இறுதித் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராகி வரும் இந்த நேரத்தில் பள்ளிகளின் நேரங்களை மாற்ற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையை தொடர்ந்து பள்ளிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மாதிரித்தேர்வுகள்:
பள்ளிகளில் பொதுத்தேர்வுக்கு முன்னதாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட இருக்கிறது. மாதிரித் தேர்வில் மாணவர்களின் செயல்திறனை பொறுத்து அவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள நேர மாற்றத்துடன் கூடுதலாக ஒருமணி நேரம் பள்ளிகள் நடத்தப்படும். இதனால் மாணவர்கள் பொதுத்தேர்வில் சிறப்பாக செயல்பட முடியும் என்று கல்வி அமைச்சர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்