நீதிமன்ற ‘பியூன்’ 13 காலிப்பணியிடங்கள் – 22 ஆயிரம் பேர் விண்ணப்பம்!!
ஹரியானா நீதிமன்றத்தில் உள்ள 13 அலுவலக உதவியாளர் பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் உட்பட 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பின்மை:
நாட்டில் ஒரு புறம் வேலைவாய்ப்புகளை புதிதாக உருவாக்குவதற்கு அரசு முயற்சிகளை எடுத்து வந்தாலும், மறு புறம் வேலைவாய்ப்பின்மை கொடுமை அதிக அளவில் மக்களை பாதித்து வருகிறது. அதிக கல்வித்தகுதி உள்ளவர்கள் மிகவும் சாதரண பணிக்கு செல்வதற்கு கூட தயாராகி வருகின்றனர். அந்த வகையில் ஹரியானாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உதவி பேராசிரியர் பணி நியமன சான்றிதழ் சரிபார்ப்பு – உயர் நீதிமன்றம் தடை உத்தரவு!!
அலுவலக உதவியாளர்:
ஹரியானா மாநில பானிபட் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவி பணியாளர் பணிக்கு 13 காலியிடங்கள் உள்ளதாகவும், 12ம் வகுப்பு கல்வித் தகுதி உள்ளவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 13 காலி இடங்களுக்கு 22,671 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதில் ஆண்கள், பெண்கள் உட்பட இளநிலை, முதுநிலை பட்டதாரிகளில் தொடங்கி தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிவில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12,000 பேருக்கு மட்டும் முதல் கட்டமாக நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது. மற்றவர்களுக்கு வேறொரு நாளில் நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்