TNPSC தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச நேரடி பயிற்சி!
தமிழகத்தில் TNPSC போட்டித்தேர்வில் வெற்றி பெறுவது என்பது அனைவருடைய கனவாக இருந்து வருகிறது. இந்த தேர்வுக்கு அரசின் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இலவச பயிற்சி:
தமிழகத்தில் அரசு வேலை கிடைப்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. ஏனென்றால் பெரும்பாலான இளைஞர்கள் படித்து விட்டு வேலையில்லாமல் கஷ்டப்படுகின்றனர். சிலர் தனியார் நிறுவனங்களை தேடி செல்கின்றனர். பலர் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். அவ்வாறு முயற்சி செய்பவர்களில் முறையான பயிற்சி இல்லாமல் பெரும்பாலான தேர்வர்கள் தோல்வியை தழுவுகின்றனர். ஏனென்றால் முறையான பயிற்சி பெறுவதற்கு கட்டணம் செலுத்தும் நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாத பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்காக ஒரு புதிய முறை நடைமுறைக்கு வந்தது. அதாவது ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் தன்னார்வ பயிலும் வட்டம் செயல்படுத்தப்பட்டது.
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – OTP மூலம் ATMகளில் பணம் எடுக்கும் வசதி!
அந்த அமைப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அதாவது TNPSC தேர்வு, வங்கி தேர்வு, சீருடை பணியாளர் தேர்வு என பல்வேறு தேர்வுகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியானது நல்ல தகுதியும், திறமையும் வாய்ந்த பேராசிரியர்களை கொண்டு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்புகளானது தேர்வு அறிவிப்புக்கு 1 மாதத்திற்கு முன்னர் தொடங்கப்படும். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மத்திய மாநில அரசுப் பணிகளில் தமிழக மாணவர்களின் பங்கு அதிகம் இருக்க வேண்டும். அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியிருந்தார். தற்போது TNPSC அடுத்த மாதத்தில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
அதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் சார்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டத்தில் TNPSC குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றது. மேலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்வுக்கு படிப்பதற்கான புத்தகங்கள் அனைத்தும் அங்கு உள்ளன. அதனை காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை எடுத்து படித்துக் கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பினை தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
Tnpsc group-4
பணம் பெறாமல் ஏழைகளுக்கு பரிந்துரை செய்யுங்கள்..