
இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.. நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவன் என்ன பேசினார் தெரியுமா..?
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன், இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த புகழ்பெற்ற இந்திய விண்வெளி பொறியாளர் ஆவார். மேலும், சிவன் PSLV மற்றும் GSLV திட்டங்கள் உட்பட பல்வேறு விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சி திட்டங்களில் பணியாற்றினார். இதை தொடர்ந்து, 2019 இல் சிவன் தலைமையின் கீழ், சந்திரயான்-2 வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்நிலையில் அவர் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “புனே மாநிலம் டிகியில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனம் (AIT) ஆனது இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவனுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. இதை தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பேசிய சிவன் விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்”.


























