பெண் குழந்தைகளுக்கு ரூ. 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு!
மாநிலத்தில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சார்ந்த பெண் குழந்தைகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் வரையிலான நிதித்திட்டத்தை மாநில முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
நிதித்திட்டம்:
மத்திய மற்றும் மாநில அரசுகள் நாட்டில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் தற்போது பெண் குழந்தைகளுக்கு ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இத்திட்டத்தின்படி மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற ரேஷன் கார்டு கொண்ட குடும்பங்களை சேர்ந்த பெண் குழந்தைகள் பிறக்கும்போது அவர்களுக்கு ரூபாய் ஐந்தாயிரம செலுத்தப்படும்.
Join Our WhatsApp Group” for Latest Updates
பிறகு இக்குழந்தைகள் முதல் வகுப்பில் சேரும்போது ரூபாய் 6000, ஏழாம் வகுப்பில் சேரும்போது ரூபாய் 7000, 12ஆம் வகுப்பில் சேரும்போது ரூபாய் 8000, இதன் பிறகு ஒரு முறை ரூ 75 ஆயிரம் வழங்கப்படும். இதன் மூலமாக பெண் குழந்தைகள் மொத்தம் ரூபாய் 1.01 லட்சம் பெறுவார்கள். இத்தொகையானது அவர்களின் 18 வயதில் வழங்கப்படும். மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடத்தப்பட்ட நிலையில் இத்திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
IND vs AFG CWC 2023: ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.. இந்தியா பவுலிங்கில் மிரட்டுமா??
இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் மாநிலத்தில் பெண் குழந்தைகளின் விகிதத்தை அதிகரிப்பது, அவர்களின் கல்வியை ஊக்குவிப்பது, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் குழந்தை திருமணத்தை குறைப்பது போன்ற நோக்கங்கள் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.