அதானியுடன் இணையும் ஃபிளிப்கார்ட் – 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு!!
வணிக நிறுவனங்கள்:
நாட்டில் உள்ள முக்கிய வணிக நிறுவனங்களில் அதானி நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்த வணிக நிறுவனத்தின் மூலம் நாட்டில் பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும், ஃபிளிப்கார்ட் நிறுவனம் இணையத்தின் மூலம் மக்கள் வாங்கும் பொருட்களை வீட்டிற்கே கொண்டு சேர்க்கும் பணியை செய்யும் நிறுவனமாகும். இந்த துறையில் ஃபிளிப்கார்ட் நிறுவனம் முதன்மையான இடத்தை பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வுகள் ரத்து? அரசுக்கு கோரிக்கை!
நிறுவனங்கள் இணைப்பு:
இந்த இரண்டு வணிக நிறுவனங்களும் தற்போது இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உள்நாட்டில் தங்கள் நிறுவனத்தின் சங்கிலி உட்கட்டமைப்பு வலுப்பெறவும், வேகமாக வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் திறனை மேம்படுத்தவும் இந்த இரண்டு வணிக நிறுவனங்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
ஃபிளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் தனது மூன்றாவது டேட்டா சென்டரை சென்னையில் உள்ள அதானி நிறுவனத்தில் நிறுவ உள்ளது. சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு உதவும் வகையில் உட்கட்டமைப்பை வலுப்படுத்த உள்ளது. இதன் மூலம் நேரடியாக சுமார் 2,500 பேர் மற்றும் மறைமுகமாக பல ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்