10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து? அரசுக்கு கோரிக்கை!
கொரோனா இரண்டாம் அலை மிகவும் அதிகமாக பரவி வரும் காரணத்தால் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுத்தேர்வுகள் ரத்து:
நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக நடப்பு ஆண்டில் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படவில்லை. இதனால் மாணவர்கள் தேர்வு குறித்த அச்சம் கொள்வார்கள் என்று கருதிய பல மாநில அரசுகளும் 12ம் வகுப்பை தவிர மற்ற வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் மற்றும் இறுதி தேர்வுகளை ரத்து செய்து அறிவித்தது.
50% பணியாளர்களுக்கு கொரோனா தொற்று – வீட்டில் இருந்தே பணிபுரிய முடிவு!!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்:
2021ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் வரும் மே 4ம் தேதி முதல் ஜூன் 21ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிடும் முன்னரே சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்துவதற்கு மத்திய கல்வி அமைச்சரிடம் பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதிகரிக்கும் எதிர்ப்பு:
தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிகவும் அதிகமாக பரவி வரும் காரணத்தால் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பாதுகாப்பானதாக இருக்காது என்றும், தேர்வு மையத்தில் இருந்து தொற்று பாரவ தொடங்கினால் அது மிக பெரிய விளைவை ஏற்படுத்தும் என்றும் கருத்துக்களை முன் வைத்து அரசியல் தலைவர்கள் பலர் 10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்