2023ம் ஆண்டுக்குள் 2500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தனது அலுவலகத்தில் வரும் 2023ம் ஆண்டுக்குள் 2500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்பு:
கோல்ட்மேன் சாச்ஸ் குழும நிறுவனம் உலக அளவிலான முதலீட்டு வங்கி மற்றும் பத்திரங்கள் நிறுவனமாகும். அது முதலீட்டு வங்கி, பத்திரங்கள் சேவைகள், முதலீட்டு மேலாண்மை மற்றும் இதர நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. உலகம் முழுதுமான வர்த்தக நிறுவனங்கள், அரசுகள் மற்றும் நிகர சொத்து மதிப்புடைய தனிநபர்கள் ஆகியோருக்கு நிறுவன இணைப்பு மற்றும் கைக்கொள்ளுதல் ஆலோசனை, மதிப்பீட்டுச் சேவைகள், சொத்து மேலாண்மை, மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு பத்திரச் சேவைகள் ஆகிய பணிகளை செய்து வருகிறது.
தியேட்டர்கள், கோவில்களை திறக்க அனுமதி – ஜூலை 26 வரை ஊரடங்கு நீட்டிப்பு!
கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் ஹைதராபாத்தில் தனது புதிய அலுவலகத்தை அமைத்துள்ளது. பொறியியல் மற்றும் தொழில் வளர்ச்சிக்கான சர்வதேச மையமாக இந்த அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சம் நிலவி வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் தகுந்த கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளுடன் அலுவகலகம் செயல்பட்டு வருகிறது.
TCS போன்ற கார்ப்பரேட் நிறுவன வேலை தான் உங்கள் கனவா? அப்போ இந்த தேர்வை எழுதுங்கள்!
தற்போது ஹைதராபாத் கோல்ட்மேன் சாக்ஸ் அலுவலகத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நடப்பாண்டில் 800 புதிய ஊழியர்களை பணியமர்த்த கோல்ட்மேன் சாக்ஸ் திட்டமிட்டுள்ளது. அதன்பின் 2023ஆம் ஆண்டுக்குள் 2,500 பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கோல்ட்மேன் சாக்ஸ் அறிவித்துள்ளது.