தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் – பொது மக்களே உஷார்!!
தமிழகத்தில் இன்று இயல்பான வெப்பநிலையை காட்டிலும் இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் செலவுக்கு கூடுதல் வெயில் கொளுத்தும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூடுதல் வெயில்:
தமிழகத்தில் பிப்ரவரி மாத துவக்கத்திலிருந்தே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தற்போது அடுத்த 7 நாட்கள் வரையிலும் 5 முதல் 8 டிகிரி வரையிலும் கூடுதல் வெப்பம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று (பிப்.18) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் எனவும், இயல்பான வெப்பநிலையை காட்டிலும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அனைவருக்கும் சொந்த வீடு கட்டித்தர முடிவு – முதல்வர் அறிவிப்பு!!
அதேபோல, இன்று தென் தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.