ஆதார்-பான் இணைப்பு முதல் மியூச்சுவல் ஃபண்ட் வரை கால அவகாசம் நீட்டிப்பு – வெளியான அப்டேட்!
நாடு முழுவதும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2023-24 ஆம் நிதியாண்டு தொடங்க இருக்கும் நிலையில், பல முக்கிய வேலைகளை செய்ய மார்ச் 31 கடைசி நாள் ஆகும். ஆனால் ஒரு சில கடைசி தேதிகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்த விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்
கடைசி தேதி நீடிப்பு
இந்தியாவில் 2022-23 ஆம் நிதியாண்டு மார்ச் 31 ஆம் தேதி உடன் முடிவடைகிறது. மேலும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 2023-24 ஆம் நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் மார்ச் 31 ஆம் தேதி உடன் ஆதார் – பான் இணைப்பு, ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு, ஆதார் – ரேஷன் கார்டு இணைப்பு, மியூச்சுவல் ஃபண்ட் நாமினேஷன், டீமாட் நாமினேஷன் ஆகியவை செய்ய கடைசி தேதி ஆகும். ஆனால் ஒரு சில விஷயங்களை செய்ய கடைசி தேதி மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் மின்கட்டணம் அதிகரிப்பு – மாநில அரசு அதிர்ச்சி அறிவிப்பு!
அதன் படி ஆதார் பான் இணைக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆதார் அட்டையுடன் ரேஷன் கார்டு இணைக்க மார்ச் 31 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க கடைசி தேதி 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் டீமாட் கணக்கு (Demat account) வைத்திருப்போர் நாமினிகளை சேர்ப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே போல மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் நாமினி சேர்ப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31ல் இருந்து செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download