மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு அதிரடி உத்தரவு! மக்கள் அவதி!
சீனாவில் ஓமைக்ரான் வைரஸின் உருமாற்றம் அடைந்த புதிய வகை வைரஸின் பரவல் தீவிரமாக பரவி மோசமாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அங்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில வாரங்களிலேயே உலகம் முழுவதும் பல பகுதிகளுக்கும் இந்த நோய் தொற்று பரவி விட்டது. அதி வேகத்தில் பரவும் தன்மை கொண்ட தொற்று ஏற்படுத்திய பாதிப்புகள் கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு அதிக அளவில் இருந்தது. உலகம் முழுவதும் நோய் தொற்றை கட்டுப்படுத்த மிகவும் போராடி வந்த நிலை சீனா மட்டும் மிகவும் விரைவிலேயே பாதிப்பில் இருந்து மீண்டது.
அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை :மக்கள் அதிர்ச்சி
அதன் பிறகு தொற்று அலைகளாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் மிகவும் தீவிரமாக போராடி வருகிறது. அதன்பின்னர் கொரோனா வைரஸில் இருந்து உருமாற்றம் அடைந்து புதிய வகை தொற்றுகள் பரவ தொடங்கியுள்ளது. அந்த வரிசையில் கொரோனா வைரஸின் ஓமைக்ரான் தொற்றின் பிஏ 2 வகை தற்போது சீனாவில் கொடிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு அங்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகிறது.
PF பயனர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்! முழு விவரம் இதோ!
இதனால் சீனாவின் சாஞ்சுன், ஜலின், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஷாங்காயில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 73 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் அங்கு 2000ராணுவ மருத்துவர்கள் உட்பட 10000 மருத்துவர்களை சீன அரசு அனுப்பியுள்ளது. முன்னதாக அங்கு முழு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மறு உத்தரவு வரும் வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.