அதிரடியாக உயர்ந்த ஆபரண தங்கத்தின் விலை : மக்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.ஆனாலும் மக்கள் அனைவரும் அட்சயதிரிதியை அன்று நகை வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. அதன் எதிரொலியாக தற்போது முதலே தங்கத்தின் விலை அதிகரிக்க துவங்கி உள்ளது.
தங்க விலை
கடந்த 2 வருட காலமாக கொரோனா தொற்றின் காரணமாக நகை பிரியர்கள் அனைவரும் தங்கம் வாங்க முடியாமல் தவித்து வந்த நிலையில் இந்த வருடம் நகை வாங்க ஆர்வமுடன் இருக்கின்றனர்.அதை தொடர்ந்து இந்த வருடம் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்துள்ளதால் பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்துள்ளது. இதனால் நகையின் விலை அதிகரித்தும், குறைந்தும் இருந்து வருகிறது.
ஆயில் இந்தியா வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.50,000/- || சற்று முன் வெளியானது
கொரோனா மற்றும் உக்ரைன் போரால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அளவுக்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக மக்கள் அனைவரும் சாதாரண மற்றும் திருமண நாட்களில் நகை கடைக்கு சென்று நகை வாங்கி மகிழ்வர். இந்த வருடம் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் நகை பிரியர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
SBI வங்கி வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.78230/- || தேர்வு கிடையாது
இந்த நிலையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,882-க்கும் சவரன் ரூ.39,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்க்கத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.71.30-க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து இரு நாட்களாக தங்க விலை உயர்ந்து உள்ளதால் பொது மக்கள் மற்றும் நகைப்பிரியர்கள் அனைவரும் கவலை அடைந்துள்ளனர்.