PF பயனர்கள் கவனத்திற்கு – புதிய விதிமுறைகள் அமல்! முழு விவரம் இதோ!
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் செலுத்தப்படும் பயனர்களின் பணத்திற்கு கிடைக்கும் வட்டிக்கு வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வரி விதிப்பு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வரி விதிப்பு:
இந்தியாவில் ஊழியர்களின் மாத சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை அவர்களின் PF கணக்கின் கீழ் சேமிக்கப்படுகிறது. இந்த தொகையுடன் நிறுவனத்தின் சார்பாகவும் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தப்படுகிறது. இந்த தொகைக்கு வட்டி விகிதமும் வழங்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்படும் தொகையானது அவர்களின் பணிக்காலம் நிறைவடையும் போது வழங்கப்படுகிறது. இந்த தொகையானது அவர்களின் முதிர்வு காலத்தில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இதுவரை வரி விதிக்கப்பட்டதில்லை.
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?
மத்திய அரசின் சமீபத்திய பட்ஜெட் தாக்கத்தில் பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த புதிய மாற்றங்களில் மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக PF கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஈபிஎம். திட்டத்தில் முதலில் முதலீடு செய்யும் தொகைக்குக் கிடைக்கும் வட்டி வருமானத்திற்கு வரி இல்லை என்பது தான் முதலில் முக்கிய விஷயமாக இருந்தது. மத்திய அரசு தாக்கல் செய்த நிதியியல் சட்டம் 2021 ல் பல மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கியா யார் என்பதை அறிந்து கொள்ளும் ராதிகா – கோபியின் சுயரூபம் தெரிய வருமா?
அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் வட்டி விகிதம் 8.1% ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒருவர் PF கணக்கில் உள்ள உள்ள 2.5 லட்சம் ருபாய் வரைக்கும் வரி செலுத்த தேவையில்லை. ஆனால் அதற்கு மேலான தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.