தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் கல்வித்தரத்தை உயர்த்த நிபுணர் குழு – நீதிமன்றம் உத்தரவு!
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை உயர்த்துவதற்கான நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
நிபுணர் குழு:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் ஏராளமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்களின் குழந்தைகள் அரசு பள்ளிகள் மூலம் பயனடைகின்றனர். தமிழக அரசு கல்வி முறைகளில் அவ்வப்போது மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இது மாணவர்கள் எளிதாக கல்வியை கற்க வழி செய்கிறது. ஒவ்வொரு வகுப்புக்கும் ஏற்ப புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கல்வித்துறை மாணவர்களின் படைப்பாற்றல் திறன் பாடத்திட்ட அடிப்படையிலான மதிப்பெண்களை வைத்து கல்வித் திறனை ஆராய்ந்து வருகிறது.
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – சிபிஎஸ்இ செயலாளர் விளக்கம்!!
அதை அடிப்படையாக வைத்து கல்வியில் புதுமைகளையும் புகுத்தி வருகிறது. தற்போது நிறைய இடங்களில் அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளின் தரத்துக்கு உயர்ந்து விட்டது. இன்றைய கால மாணவர்கள் எளிதில் கற்கும் திறனை பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளில் இளம் வயதிலேயே மாணவர்கள் இணைய வழி கல்வியை கற்கின்றனர். தற்போது கொரோனா ஊரடங்கால் கல்வி முழுவதும் இணைய மூலமாகவே மாறி விட்டது. பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்ட ஆண்டிற்கு ஒரு முறை புதிய கல்வி கற்றல் இலக்கை அடிப்படையாக வைத்து பாடங்களை மாற்றம் செய்து வருகிறது.
TN Job “FB
Group” Join Now
உயர் நீதிமன்றத்தில் தமிழக கல்வித் துறையின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன் அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என கூறினார். இதனை கேட்டறிந்த நீதிபதிகள் தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.