10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் பெருகிவரும் கொரோனா தொற்றால் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மாதம் நடைபெற இருந்த பொதுத்தேர்வுகளை ஒத்தி வைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகள் ஒத்திவைப்பு
நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலை வீசிக்கொண்டுள்ளது. இதன் விளைவாக பல்வேறு மாநிலங்களில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமான நோய் பாதிப்பு மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த வகையில் கொரோனா நோய் தாக்கத்தால் மஹாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி துவங்கி 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அம்மாநிலத்தில் கொரோனா பரவலின் வேகம் தீவிரமடைந்து வருவதால் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் குழப்பங்கள் நீடித்து வந்தது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடக்கவிருந்த பொதுத்தேர்வுகளை ஒத்திவைத்துள்ளதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா – இன்றுடன் பதவிக்காலம் முடிவு!!
இது குறித்து அவர் தெரிவிக்கையில், ‘மஹாராஷ்டிராவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் மே மாத இறுதியிலும், 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ஜூன் மாதத்தில் நடைபெறும். இந்த தேர்வுகளுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்’ என கூறினார். தொடர்ந்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ தேர்வுகளை நடத்தும் தேர்வு வாரியத்துக்கு, தேர்வுகளை ஒத்தி வைப்பது தொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.
I have writing exam