“நான் விலகினாலும் துறை சிறப்பாகச் செயல்படும்”.. தலைவர் பதவியிலிருந்து விலகும் எலான் மஸ்க்..!!
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். மேலும், பதவியேற்ற பின்னர் எண்ணற்ற சட்ட திருத்தங்கள் செய்த டிரம்ப் அமெரிக்க அரசின் செலவுகளை குறைத்து செயல்திறனை அதிகரிக்க, அரசாங்க செயல்திறன் துறை (DOGE) யை உருவாக்கினார். இந்த துறைக்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை தலைமை அதிகாரியாக நியமித்தார். மேலும், சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து எலான் மஸ்க் விலகவுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு பதிலளிக்கும் வகையில் மஸ்க் DOGE துறை பணிகளுக்கு ஒதுக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ளப் போவதாக அறிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
இதை தொடர்ந்து, “தற்போது அமெரிக்க அரசின் திறன் மேம்பாட்டுத் துறையின் (DOGE) தலைவர் பதவியிலிருந்து மே 30 ஆம் தேதி விலக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்”. மேலும், “தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், அதிபர் டிரம்ப் விரும்பும் வரை பகுதி நேர ஆலோசகராக தொடர திட்டமிட்டுள்ளதாகவும், தான் விலகினாலும், நூறு ஊழியர்களுடன், திறன் மேம்பாட்டுத் துறை தொடர்ந்து சிறப்பாக செயல்படும்” என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.


























