கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..

0
 ????? ??????? ??????? ?????????? ????????? ???.. ?????? ????? ????? ????????? ??????? ?????..
 கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..

 கனமழை காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை.. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்..

 

தென்காசி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, குற்றாலம் அருவிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், அதிகரித்து கொண்டே இருக்கும் நீர்மட்டத்தின் உயர்வால், அருவிகளுக்குச் செல்வோரை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தென்காசியில் உள்ள குற்றாலத்தின் ஐந்தருவி மற்றும் பிற முக்கிய அருவிகளில் “இரண்டாவது நாளாக இன்றும் (20-01-2025) குளிக்கத் தடை விதிக்கப்பட்டது”. மேலும், தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் குறைந்த அளவிலான வளிமண்டல சுழற்சியே மழைக்குக் காரணம் என்றும், “ஜனவரி 23” ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் சராசரியை விட அதிகமான மழை பெய்யும் என்று “பிராந்திய வானிலை ஆய்வு மையம்” (RMC) தெரிவித்துள்ளது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!