தமிழகத்தில் நவ.19ல் ஓட்டுநர், நடத்துநர் தேர்வு – பேருந்துகள் இயக்க உத்தரவு!
தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் தேர்வு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கும் நிலையில், அன்றைய தினம் மாநகர பேருந்துகளை முழு அளவில் இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியான உத்தரவு
தமிழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் தேர்வு வருகிற நவ. 19 ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் க. குணசேகரன் சுற்றறிக்கை ஒன்றை போக்குவரத்து பணிமனை அலுவலகங்களுக்கு அனுப்பி இருக்கிறார். அதில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் நவ.19 ஓட்டுநர், நடத்துநர் பணிக்கான தேர்வு காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நடைபெற இருக்கிறது.
ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிக்கல் – தமிழக அரசு நடவடிக்கை!!
இந்த தேர்வுக்கு சரியான நேரத்தில் தேர்வர்கள் சென்று வர பல்கலைக்கழகம் வழியே இயங்கும் அனைத்து பேருந்துகளையும் நடை இழப்பின்றி, குறித்த நேரத்தில் முழு அளவில் இயக்க வேண்டும். மேலும் தேர்வு முடிந்த பின் வருபவர்களுக்கு பேருந்துகளில் ஏற்றி அனுப்ப அலுவலர்களை நியமிக்கவும், பேருந்துகளின் முன்புற கண்ணாடியில் தேர்வு தொடர்பான விவரங்களை இடம்பெற செய்யவும் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.