உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!

0
உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!
உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!
உள்நாட்டு விமான பயணங்களுக்கும் கொரோனா சான்று அவசியம்!!

சென்னை விமான நிலையங்களில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்ற பரிசோதனை சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா சான்று:

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக வெளி நாடுகளுக்கு செல்லும் இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளில் இந்திய பயணிகள் விமானங்களுக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கொரோனா சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதன்படி சென்னையிலிருந்து அந்தமான், ஒடிசா, ராஜஸ்தான், மணிப்பூர், மேற்குவங்கம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமானங்களில் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களுக்கு பயணம் செல்ல விரும்புபவர்கள் 72 மணி நேரத்திற்கு முன்பு ஐசிஎம்ஆர் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என்ற சான்று பெற்றிருக்க வேண்டும்.

தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணி உத்தரவு – மாவட்ட ஆட்சியர்!!

அதன் பிறகே விமானத்தில் பயணம் செய்ய முடியும். இந்த சான்றிதழை விமான நிறுவனத்தின் கவுன்டர்களில் சமர்ப்பிப்பவர்களுக்கு மட்டுமே விமானத்தில் பயணம் செய்ய போர்டிங் பாஸ் வழங்கப்படும். மேலும் இந்த ஆறு மாநிலங்களுக்கும் தனி விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!