தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது அனைத்து வழிபாட்டு தலங்களிலும் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக
நடைபெற உள்ளது. அதனால் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறையத் தொடங்கிய பிறகு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி தற்போது கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து வழிபாட்டு தலங்களிலும் கோவில் திருவிழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்திரை திருவிழா தமிழகத்தில் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது. மேலும் இத்தினத்தில் பெரும்பாலான கோவில்களில் தேர் திருவிழா நடைபெற்றது.

தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அந்த வகையில் திருப்பூர் மாவட்ட அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதாக உள்ளது. முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட திருத்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கும் சித்திரை திருவிழா வருகிற மே 5ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அத்துடன் 3 நாட்களில் தேர் திருவிழா நடைபெற உள்ளது. இதில் முக்கிய தேரோட்ட தினமாக கருதப்படுவது வருகிற மே 12ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

Exams Daily Mobile App Download

இதனை கண்டுகளிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதனால் இத்தினத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள ஏதுவாக பெரிய தேரோட்ட தினமான மே 12ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று அவிநாசி நண்பர்கள் அறக்கட்டளை சாா்பில் மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் அவர்களிடம் கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை ஏற்று மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டால் கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மே 12ம் தேதி அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!