தமிழகத்தில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 28ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலை வைரஸ் தொற்று எதிர்பாராத அளவு பாதிப்பு எண்ணிக்கையையும், உயிரிழப்புகளையும் அதிகரித்தது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு ஊரடங்கை அறிவித்தது.இந்த நேரத்தில் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 2021 ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் செலுத்தப்பட்டு வந்தது. இதன் விளைவாக கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் தாக்கமும் குறைந்தது.
கொரோனா பரவலால் ஊரடங்கு அச்சம் – அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு!
இந்த நிலையில் குழந்தைகளையும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காக்கும் முயற்சியாக 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து கோவாக்சின் தடுப்பூசி 2 டோஸ் குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டது. தற்போது ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 28ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில் முதல் தவணையாக 44,710 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 13,268 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவர்களுக்கு முதல் தவணையாக 89,373 தடுப்பூசிகள், இரண்டாம் தவணையாக 77,321 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 28ம் தேதி நடைபெற உள்ள முகாமில் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய பள்ளி மாணவர்களுக்கு, இதுவரை தடுப்பூசியே செலுத்தாத மாணவா்களுக்கும் பள்ளிகளில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.