SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு!
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வோர் கவனத்திற்கு!

டிஜிட்டல் மூலமாக பரிவர்த்தனைகள் செய்யும்போது பல்வேறு மோசடிகள் நடைபெறுகிறது. இதனால் தன்னையே அறியாமல் பலரும் ஏமாந்து ஹேக்கர்களிடம் மாட்டிக் கொண்டு தவித்து வருகின்றனர். இதிலிருந்து தப்பிப்பதற்காக என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.

SBI வங்கி:

தற்போது வங்கி பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகின்றன. ஆனால் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகள் செய்யும்போது பல மோசடிகளும் நடைபெறுகிறது. இந்நிலையில் எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்கள் இடையே டிஜிட்டல் பயனாளிகள் பரிவர்த்தனை செய்யும் போது என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை தற்போது அறிவுறுத்தியுள்ளது. டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனைகள் செய்யும்போது ஏற்படும் மோசடிகளில் இருந்து தப்பிப்பதற்கு கீழ்க்கண்ட நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் மே 12ம் தேதி உள்ளூர் விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

அதாவது உங்களது இணைய பக்கத்தில் லாகின் செய்யும் பாஸ்வேர்டுகளை தனித்துவமாக மற்றும் சிக்கலான பாஸ்வேர்டுகளை போட்டு பயன்படுத்த வேண்டும். மேலும் பாஸ்வேர்டுகளை எவருக்கும் பகிரக்கூடாது. கட்டாயமாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உங்களது பயனர் ஐடி, பாஸ்வேர்டு இனி ஒருபோதும் சேமிக்கவும் வெளிப்படுத்தக்கூடாது. எதிலும் எழுதி வைக்கவும் வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும் பொது இடங்களில் வை பை வசதிகளை பயன்படுத்தி பரிவர்த்தனைகளை செய்வதை தடுக்கவும். இது மட்டுமல்லாமல் பரிவர்த்தனைகளை செய்து முடித்தவுடன் உடனே லாக் அவுட் செய்து விடவும்.

Exams Daily Mobile App Download

யுபிஐ கணக்குகளையும் பாதுகாப்பாக எப்படி வைத்துக் கொள்வது என்பதற்குரிய அறிவுரைகளையும் தற்போது எஸ்பிஐ வங்கி வழங்கியுள்ளது. அதாவது மொபைல் நம்பர் மற்றும் ஐடி நம்பரை வித்தியாசமாகவும் தனித்துவமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். எதுவும் தெரியாத கோரிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் பதில் அளிக்க வேண்டாம் என எஸ்பிஐ பரிந்துரைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலமாக பரிவர்த்தனை செய்யும் போது சீக்ரெட் நம்பரை பதிவிடும்போது யாருக்கும் தெரியாமல் பதிவிடவும். மேலும், சீக்ரெட் நம்பரை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. மொபைல் பேங்கிங் மூலமாக பரிவர்த்தனைகள் செய்யும்போது மொபைல் பின் நம்பரை எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!