உலக தரத்தில் தமிழக ரயில் நிலையங்கள் மேம்பாடு – பிப்.26 பிரதமர் தொடங்கி வைப்பு!

0
உலக தரத்தில் தமிழக ரயில் நிலையங்கள் மேம்பாடு

தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்கள் உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகள் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்க உள்ளது.

பிரதமர் தொடங்கி வைப்பு:

நாட்டின் மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையில் மத்திய அரசு பல்வேறு மேம்பாட்டு பணிகளையும் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதியான திங்கட்கிழமை அன்று அடிக்கல் நாட்டில் தொடங்கி வைக்கிறார். இதைத் தவிர நாட்டில் உள்ள பெரும்பாலான ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் ரயில் நிலையம் திட்டத்தின் கீழ் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக “ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு” என்ற திட்டத்தின் கீழ் வசதிகளின் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது.

நெய்வேலி NLC நிறுவனத்தில் வேலை – Engineering முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

மொத்தம்  1318 ரயில் நிலையங்கள் நாடு முழுவதும் அம்ருத் திட்டத்தின் கீழ் மேம்படுத்துவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு 508 ரயில் நிலையங்கள் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களின் மேம்பாட்டு பணிகள் திங்கட்கிழமை தொடங்க உள்ளதாகும். இதில் தான் தமிழகத்தில் 34 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பலனடையும் ரயில்வே நிலையங்களுக்கு  ரயில்வே கோட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான விரிவான தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!