பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடர் பட்ஜெட் அறிவிப்புக்கு பின் இலவச மின்சாரம் குறித்து முதல்வர் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பட்ஜெட் உரை:
பீகார் மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் நிதிஷ் குமார் பேசுகையில், சில மாநிலங்களில் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளனர். ஆனால், நாங்கள் ஒருபோதும் அதுபோன்று கூறியது இல்லை. நான் தொடக்கத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்படாது என கூறி வருகிறேன். நாங்கள் குறைந்த விலையில், அதை வழங்கி வருகிறோம். அதுவே பாதுகாப்பாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
NTPC Manager வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.180000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
பிற மாநிலங்களை விட மின் கட்டணம் பீகாரில் உயர்வாக இருக்கும் பட்சத்தில், நாங்கள் நிச்சயம் அதனை மலிவாக கிடைக்க செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் மத்தியில் குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் சட்டசபையில் இந்த பட்ஜெட் உரையில் பலருக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.