இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது டிக்கெட் விலை குறைக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை
இந்தியாவில் ரயில்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவையை வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தற்போது ரயில் டிக்கெட் விலையை குறைத்து இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
உலக தரத்தில் தமிழக ரயில் நிலையங்கள் மேம்பாடு – பிப்.26 பிரதமர் தொடங்கி வைப்பு!
அதாவது தினசரி பயணிகளுக்கு குறைந்தபட்ச ரயில் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காக ரயில்வே வாரியம் குறைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ. 30 ஆக உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ரூ.10 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ரயில்வே வாரியத்தின் இந்த அறிவிப்பால் டெல்லி-என்சிஆர் உட்பட நாட்டின் பல்வேறு ரயில்களில் தினசரி பயணம் செய்வோர் பயனடைய இருக்கின்றனர்.