உலகை அச்சுறுத்தும் குரங்கம்மை.. நோய் பாதிப்பை கண்டறிய புதிய கிட்.. விவரம் உள்ளே!!
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப் படைத்தது. இந்தியா மட்டுமில்லாமல் உலக நாடுகளை அச்சுறுத்தி பல உயிர்களை காவு வாங்கியது. தற்போது உலக நாடுகளில் குரங்கு அம்மை வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் மத்திய அரசு ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உங்கள் வாகனங்களுக்கு ” FANCY ” யான நம்பர் பிளேட் வாங்கணுமா..! கவலை வேண்டாம்..!
அதாவது குரங்கம்மை நோய் பாதிப்பை கண்டறிவதற்கான RT-PCR கிட் இந்தியாவிலேயே உருவாக்க இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் எல்லைகளில் அதி தீவிர கண்காணிப்பை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவுட்டுள்ளது.


























