திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் - தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஹாப்பி நியூஸ் – தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடு!

கோடை விடுமுறையில் திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாமல் இருக்க விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கோயில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி, பக்தர்களுக்கு உணவு, மோர், குடிநீர், காலை உணவு மற்றும் மருத்துவ வசதிகள், வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு:

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் இன்றி தினசரி பூஜைகள் நடைபெற்றது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டு உள்ளது. இதனால் ஏழுமலையானை தரிசனம் செய்ய நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். மேலும் தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு சென்று வருகின்றனர். தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதால், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது.

சென்னையில் இன்று அதிரடியாக மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியுள்ளார். அதன்படி ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூலை 15ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசன பக்தர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இதனால் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும். இதை தொடர்ந்து பக்தர்கள் பசியை போக்க, காலை சிற்றுண்டி முதல் இரவு உணவு வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர மோர், குடிநீர், மருத்துவ வசதிகளை வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோடை காலம் தொடங்கி விட்டதால், வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பக்தர்களுக்கு கோயில் நான்கு மாட வீதிகளில் நிழற்பந்தல்கள், வெள்ளை நிற கூலிங் பெயிண்ட், சிவப்பு கம்பளங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஏழை, எளிய குடும்பங்களுக்கு திருமணத்தின் நிதிச்சுமையை குறைக்க ஏழுமலையான் ஆசீர்வாதத்துடன் இலவச திருமணங்களை நடத்தும் கல்யாணமஸ்து திட்டம் விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் தம்பதிகளுக்கு தங்க தாலி, பட்டு வஸ்திரம், பூ மாலை, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி பிறந்த இடம் பற்றிய விரிவான புத்தகம் தெலுங்கு, ஆங்கிலம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!