சென்னையில் இன்று அதிரடியாக மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே செல்கிறது. ஏற்கனவே ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 37,896 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று மேலும் 56 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை:
தங்கத்தின் விலை சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. மறுபுறம் தாய்மார்கள் மற்றும் நகைப்பிரியர்கள் நகை வாங்குவதில் தான் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் எதிர்காலத்திற்கு பாதுகாப்பான திட்டமாகவும் தாய்மார்கள் எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்து விட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? வலுக்கும் கோரிக்கைகள்!
மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரால் அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தும் பாதிப்படைந்து பங்குச்சந்தை நிலவரம் மிகவும் சரிவடைந்தது. இதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து சில நாட்களாக ஏற்ற, இறக்கமாய் இருந்து கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று திடீரென தங்கத்தின் விலை குறைந்தது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர துவங்கியுள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.37,896க்கு விற்பனை செய்யப்பட்டது.
Exams Daily Mobile App Download
மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,737 க்கு விற்பனையானது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.37,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7 உயர்ந்து ரூ.4,744 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.