ஆகஸ்ட் 3 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது தவறான தகவல் !
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆனது வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளிவந்த தகவல் முற்றிலும் தவறானது என பள்ளி கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளிகளில் நோட்டீஸ்:
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கொரோனா ஊடரங்கு காரணமாக, நடைபெறாமல் உள்ளது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் மாநிலத்தில் சில அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது.
தவறானது என பள்ளி கல்வி துறை விளக்கம்:
இது தொடர்பாக பள்ளி கல்வி துறை, அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது முற்றிலும் தவறான தகவல் எனவும், மாணவர் சேர்க்கை பற்றி அரசு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும் நோட்டீஸ் ஒட்டிய பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.