கல்லூரிகள் 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி – யுஜிசி நெறிமுறைகள் வெளியீடு !!!!

0
கல்லூரிகள் 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி - யுஜிசி நெறிமுறைகள் வெளியீடு !!!!
கல்லூரிகள் 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி - யுஜிசி நெறிமுறைகள் வெளியீடு !!!!

கல்லூரிகள் 50% மாணவர்களுடன் இயங்க அனுமதி – யுஜிசி நெறிமுறைகள் வெளியீடு !!!!

நாடு முழுவதும் கல்லூரிகள் கொரோனா தாக்கத்தினால் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் டெல்லியில் செயல்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50% மாணவர்களுடன் இயக்கிக்கொள்ள மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி குழு வெளியிட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கொரோனா பரவல் !

இந்திய நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டது. தற்போது வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

கல்லூரிகள் திறப்பு !

பல்வேறு கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த மத்திய அரசு கல்லூரிகளை திறப்பது அந்தந்த மாநில தொற்றின் நிலையினை பொறுத்தது என்றும், அதனை அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தற்போது தலைநகர் டெல்லியில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை 50% மாணவர்களுடன் இயக்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

BANK
BANK
யுஜிசி நெறிமுறைகள் !

கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் செயல்படுத்தப்பட வேண்டிய நெறிமுறைகளை யுஜிசி தற்போது வெளியிட்டு உள்ளது. கண்டிப்பான முறையில் அனைத்து கல்லூரிகளும் இதனை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • முகக் கவசம் அனைவரும் அணிய வேண்டும். அதேபோல் சமூக இடைவெளி விட்டுத் தான் அனைவரும் இருக்க வேண்டும்.
  • கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் வரக்கூடாது.
  • கொரோனா அறிகுறி உள்ளவர்களை கல்லூரிக்குள்ளும், விடுதிக்குள்ளும் அனுமதிக்கக் கூடாது.
  • ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பயன்படுத்த வேண்டும்.
  • முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதால் அவர்களை முதலில் கல்லூரிக்கு வரவழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • 50% மேல் மாணவர்களை எக்காரணத்திற்காகவும் அனுமதிக்க கூடாது என்று உறுதியாக உத்தரவிடப்பட்டுள்ளது

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!