பள்ளிகள் திறப்பு குறித்து ஆகஸ்ட் 15க்கு பிறகு முடிவு – அமைச்சர் தகவல்!
பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு :
கொரோனா பெருந்தொடரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து கல்வி அமைச்சர் நமச்சிவாயம் பதில் அளித்துள்ளார். புதுச்சேரி அரசு கல்வித்துறை வளாகத்தில் நடப்பாண்டுக்குரிய சென்டாக் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டது.
கிரிக்கெட்டில் இருந்து விலகிய இந்திய U-19 உலகக்கோப்பை கேப்டன் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இதனை தொடங்கி வைத்த கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது புதுச்சேரி மாநிலத்தில் நிகழாண்டு (2021-22) இளநிலை தொழில் படிப்புகள், கலை, அறிவியல், வணிகம், நுண்கலை படிப்புகளுக்கான சேர்க்கைகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பம் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது என்றும் விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறினார். மேலும் நீட் தேர்வு முடிந்த பின்னர் மருத்துவ கல்விக்கான சேர்க்கை தொடங்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.
TN Job “FB Group” Join Now
கர்நாடக மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரியில் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் ஆராய்ந்து ஆய்வு செய்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர் புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பிறகு துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அறிவிக்கப்படும் வேண்டும் கூறினார்.