கிரிக்கெட்டில் இருந்து விலகிய இந்திய U-19 உலகக்கோப்பை கேப்டன் – ரசிகர்கள் அதிர்ச்சி!
2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை வென்ற கேப்டன் என்ற பெருமையை கொண்டுள்ள உன்முக்த் சந்த் இந்திய கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கேப்டன்:
உன்முக்த் சந்த் தான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே டெல்லி அணிக்கான ரஞ்சி கோப்பை போட்டியின் மூலம் அறிமுகம் ஆனார். தனது நான்காவது போட்டியில் 151 ரன்கள் அடித்து சதமடித்தார். தனது 18 வயதில் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். ஐபிஎல் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார். 2012-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி போட்டியில் 111 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
பிளாஸ்டிக் பைகள், தட்டுகள் & கோப்பைக்கு தடை விதிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
பின்னர், இந்தியா ஏ அணியின் வீரராக நியமிக்கப்பட்டார். 2013 நியூசிலாந்து ஏ மற்றும் 2015 ல் பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டங்களில் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அதன்பின்னர், 2016ம் ஆண்டு 50 ஓவர் விஜய் ஹசாரே டிராபி அணியில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து ஐபிஎல் ல் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறினார். தொடர்ந்து நேர்ந்த தொலைவியின் காரணமாக அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இந்நிலையில், 2012-ல் இந்திய அணி கேப்டனாக U -19 உலகக் கோப்பையை வென்ற உன்முக்த் சந்த்,தனது 28 வது வயதில் இந்திய கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தனது டிவீட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், உலகம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளைத் தேடிச் செல்வதற்காக, பிசிசிஐக்கு விடை கொடுத்து , அதன் நல்ல நினைவுகளுடன் வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அமெரிக்காவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் உன்முக்த் சந்த் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவரது வெளியேற்றம் குறித்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.