Daily Current Affairs March 5, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 5, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 05 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

இந்தியாவின் அந்நிய நேரடி முதலீடு (FDI) 7.54 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிப்பு!!

  • அந்நிய நேரடி முதலீடு  (FDI) என்பது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகின்றது.
  • தற்போது வெளியிடப்பட்ட ஆதாரங்களின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் இந்தியாவின் மொத்த அந்நிய நேரடி முதலீடு 7.54 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் ஒன்பதாவது மாதங்களுக்குள் அதிகமான முதலீடாக இது கருதப்படுகின்றது.
  • கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இடையே மெய்நிகர் கூட்டம் நடைபெற உள்ளது!!

  • பிரதமர் நரேந்திர மோடி, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வெனுடன், மார்ச் 5 ஆம் தேதி மெய்நிகர் கூட்டம் நடைபெற இருக்கின்றது.
  • இது, கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து இரு தலைவர்கள் இடையே நடைபெறும் 5 வது பேச்சுவார்த்தையாகும்.
  • முதல் இந்தியா நார்டிக் உச்சிமாநாட்டுக்காக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டாக்ஹோம் சென்றிருந்தார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சிறப்பு மேக் இன் இந்தியா வார நிகழ்ச்சியில் பங்கேற்க, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, புதுமை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நெருங்கிய ஒத்துழைப்பை கொண்டுள்ளன. இதனை மேலும் பலப்படுத்த இந்த கூட்டம் நடைபெற இருக்கின்றது.

செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பிரதமர் நரேந்திர மோடி பெறவிருக்கிறார்!!

  • செராவீக் (காம்பிரிட்ஜ் எரிசக்தி ஆராய்ச்சி கூட்டாளிகள் வாரம்) 2021 நிகழ்ச்சியில் மார்ச் 5 அன்று மாலை 7 மணிக்கு காணொலி மூலம் சிறப்புரை ஆற்றவுள்ள பிரதமர் கூடுதலாக, செராவீக் சர்வதேச எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் தலைமைத்துவ விருதையும் பெறவிருக்கிறார்.

செராவீக் பற்றி

  • டாக்டர் டேனியல் யெர்கின் என்பவரால் 1983-ம் ஆண்டு செராவீக் நிறுவப்பட்டது. அந்தாண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஹூஸ்டனில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, உலகின் முன்னணி வருடாந்திர எரிசக்தி தளமாக கருதப்படுகிறது.
  • 2021 மார்ச் 1 முதல் 5 ஆம் தேதி வரை காணொலி மூலம் செராவீக் நடைபெறுகிறது.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

நியமனங்கள்

அமெரிக்க அதிபரின் துணை உதவியாளர் மற்றும் WHMO அமைப்பின் இயக்குநராக மஜு வர்கீஸ் நியமனம்!!

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் துணை உதவியாளராகவும், வெள்ளை மாளிகை இராணுவ அலுவலகத்தின் இயக்குநராகவும் இந்திய-அமெரிக்கரான மஜு வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • முன்னதாக, 2020 அதிபர் தேர்தலின் போது ஜோ பைடன் பிரச்சாரத்தின் தலைமை இயக்க அதிகாரியாகவும், பின்னர் தொடக்கக் குழுவின் நிர்வாக இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
  • WHMO என்பது வெள்ளை மாளிகையின் உள்செயல்படும் ஒரு ராணுவ பாதுகாப்பினை வழங்கும் அமைப்பாகும். மஜு வர்கீஸ் ஏற்கனவே அதிபர் ஒபாமா ஆட்சி காலத்தில் முக்கிய பதவியில் இருந்தார்.

முக்கிய நாட்கள்

பல ஆளுமை கோளாறு (multiple personality disorder) விழிப்புணர்வு நாள்!!

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 5 ஆம் தேதி multiple personality disorder விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. multiple personality disorder என்பது ஒருவர் பல வித குணங்களை ஒரு சேர காட்டுவதே ஆகும்.
  • மக்கள் மத்தியில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது.

பிற நிகழ்வுகள்

நடிகர் சோனு சூட் இந்தியாவின் மிக பெரிய ரத்த வங்கியினை திறந்து வைக்க உள்ளார்!!

  • “சோனு ஃபார் யூ” என்ற செயலியை நடிகர் சோனு சூட் அறிமுகப்படுத்தி வைக்கவுள்ளார். இதனால் இது இடியாவின் மிக பெரிய ரத்த வங்கியாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலி மூலமாக மக்கள் தங்களுக்கு தேவையான ரத்தத்தினை உடனடியாக பெற்று கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதன் மூலமாக விபத்துகளில் காயமடைபவர்களுக்கு உடனடியாக ரத்தம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

சிறந்த நகராட்சி உள்ள நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியீடு!!

  • இந்தியாவில் சிறந்த நகராட்சி உள்ள நகரங்கள் கொண்ட பட்டியல் எவை என்ற பட்டியலை மத்திய அமைச்சர் ஹாதீப் சிங் பூரி வெளியிட்டுள்ளார்.
  • இந்த பட்டியல் அந்தந்த நகரங்களின் நகராட்சிகள் செயல்திறன் குறித்து தயாரிக்கப்படுகின்றது.
  • இந்த பட்டியலில் 2 பிரிவுகள் உள்ளது. அதில் 10 லட்சம் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் 10 லட்சம் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் இந்தூர் மாவட்டம் உள்ளது.

மக்கள் வாழ சிறந்த இடம்” என்ற பட்டியல் வெளியீடு!!

  • இந்தியாவில் மக்கள் வாழ சிறந்த நகரம் எது என்ற ஆராய்ச்சி மத்திய அரசு சார்பில் நடத்தப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கான முடிவுகளை மத்திய அரசு வெளியிட்டது. இந்த பட்டியலின் முதல் இடத்தில கர்நாடகாவின் பெங்களூரு முதல் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் சென்னை 4 இடத்தினை பிடித்துள்ளது.
  • இந்த ஆய்வில் மக்கள் நேரடியாகவும் இணைய வழியிலும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். இந்த ஆய்வு ஒரு நகரத்தின் சுகாதார மேம்பாடு, மக்களின் வாழ்க்கை திறன், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடைப்படையில் நடத்தப்பட்டுள்ளது.

முதல் 10 இடங்களில் உள்ள நகரங்கள்

  • 1 இடம் – பெங்களூரு
  • 2 இடம் – புனே
  • 3 இடம் – அஹமதாபாத்
  • 4 இடம் – சென்னை
  • 5 இடம் – சூரத்
  • 6 இடம் – நவி மும்பை
  • 7 இடம் – கோவை
  • 8 இடம் – வதோதரா
  • 9 இடம் – இந்தூர்
  • 10 இடம் – மும்பை

ஆளுமை மிக்க பெண் தலைவராக தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்வு!!

  • உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு அமெரிக்கா நாட்டிலுள்ள பல்வேறு இட முன்னேற்றக்கழகம் சார்பில் சிறந்த ஆளுமை பெண் தலைவராக தெலுங்கானா மாநிலத்தின் கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் பெண்களுக்கு வரும் 7 ஆம் தேதி சிக்காகோ நகரில் நடைபெறும் விழாவில் அமெரிக்கா எம்பி டேனி விருதுங்களை காணொளி காட்சி மூலம் வழங்கவுள்ளார்.
  • மொத்தமாக, 20 துறைகளில் சிறந்து விளங்கும் 20 பெண்களுக்கு இந்த ஆண்டு இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Download TNPSC Notification 2021 

மரணங்கள்

நாணயவியல் அறிஞர் மற்றும் பத்திரிகை ஆசிரியர் ரா.கிருஷ்ணமூர்த்தி காலமானார்!!

நாணயவியல் அறிஞர் மற்றும் தினமலர் இதழின் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான ரா.கிருஷ்ணமூர்த்தி உடல் நல குறைவால் காலமானார். இவர் சங்கத்தமிழ் மன்னர்கள் பயன்படுத்திய பழம்பெரும் நாணயங்களை கண்டுபிடித்தவர். அது தொடர்பாக இவர் பல ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

தமிழ் எழுத்துக்களை கணினி வழியில் பயன்படுத்த தமிழ் எழுத்து துருக்களை கண்டுபிடித்தவரும் இவரே ஆவார். தமிழ் செம்மொழி என்று நிரூபணம் செய்ய தமிழாக்கி அரசு இவரது நாணயவியல் ஆராய்ச்சிகளை பயன்படுத்தியுள்ளது.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!