Daily Current Affairs March 4, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 4, 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 04 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

காப்பீட்டு குறை தீர்ப்பாளர் விதிகள், 2017-இல் விரிவான திருத்தங்கள் அறிவிப்பு!!

  • காப்பீடு சேவைகள் தொடர்பான புகார்களை  உரிய நேரத்தில், குறைந்த செலவில், பாரபட்சமின்றி வழங்கும் வகையில் காப்பீட்டு குறை தீர்ப்பாளர் அமைப்பு முறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு, காப்பீட்டு குறை தீர்ப்பாளர் விதிகள், 2017-இல் விரிவான திருத்தங்களை மார்ச் 2-ஆம் தேதி அரசு அறிவித்தது.
  • இதன்படி காப்பீட்டாளர், முகவர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோரின் சேவைகள் மீதான புகார்கள் குறை தீர்ப்பாளர்களிடம் வழங்கப்படும்.
  • மேலும் காப்பீட்டு இடைத்தரகர்களும் குறை தீர்ப்பாளர் அமைப்புமுறையின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
  • புகார்களை காணொலிக் காட்சி வாயிலாகவும்  குறை தீர்ப்பாளர் விசாரிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சகம் பற்றி

நிறுவகிக்கப்பட்டது – 1946

மத்திய அமைச்சர் – அனுராக் தாகூர்

தலைமையகம் – புது டெல்லி

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!!

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியாவும், பிரான்சும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது பற்றி பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஜனவரி மாதம் கையெழுத்தானது.
  • பரஸ்பர ஒத்துழைப்பு, சமத்துவம், பயன்களைப் பரிமாறிக் கொள்வதன் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை ஊக்குவிப்பதே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும். சூரிய மின்சக்தி, காற்றாலை, ஹைட்ரஜன், உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்நுட்பங்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக,
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பயிற்சியும், அவர்களது பரிமாற்றமும் ஏற்படும்.
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களும், தரவுகளும் பரிமாறிக் கொள்ளப்படும்.
  • பயிலரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்களுக்கு ஏற்பாடு; உபகரணங்கள், செயல்முறை மற்றும் தொழில்நுட்பங்கள் பரிமாறப்படும்.
  • கூட்டு ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் திட்டங்கள் மேம்படுத்தப்படும்.

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – மார்ச் 2021

மாநில நிகழ்வுகள்

நாகாலாந்து தனது முதல் விமான சரக்கு சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது!!

  • நாகாலாந்து தனது முதல் விமான சரக்கு சேவைகளை திமாபூர் விமான நிலையத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நாகாலாந்து முதல்வர் இந்த சேவையை அதிகாரப்பூர்வமாகக் கொடியசைத்து துவக்கி வைத்தார். இது நாகலாந்து அரசின் தோட்டக்கலைத் துறை மற்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கூட்டு முயற்சியாகும்.
  • இந்த சேவைகளில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான பங்காளிகளாக உள்ளனர்.

நாகாலாந்து பற்றி

தலைநகரம் – கோஹிமா

முதலமைச்சர் – நீபியு ரியோ

ஆளுநர்- ஆர்.என்.ரவி

எண்ணெய் மற்றும் எரிவாயு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் முதன்மை மாநிலமாக தமிழகம் தேர்வு!!

  • எண்ணெய், எரிவாயு சேமிப்பு குறித்து மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று அகில இந்திய செயல்திறன் விருது கிடைத்துள்ளது.
  • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எறியவாயு அமைச்சகம் கடந்த 2000 ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் எரிவாயு சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த “சாக்ஷம்” என்ற பெயரில் எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வழிவகை செய்தது.
  • இதில் கடந்த ஆண்டு அதிகளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியதற்காக தமிழக அரசிற்கு அகில இந்திய செயல்திறன் விருது வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச நிகழ்வுகள்

இந்தியா- ஃபிஜி இடையே வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்!!

  • மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகமும்,  ஃபிஜி குடியரசு நாட்டின் வேளாண்மை அமைச்சகமும், விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் நிர்வாக முகமைகளின் வாயிலாக பரிந்துரைக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக கூட்டு பணிக் குழு அமைக்கப்படும். இந்த பணிக் குழு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் இந்தியாவிலும் ஃபிஜியிலும் தனது கூட்டத்தை நடத்தும்.
  • ஒப்பந்தம் கையெழுத்தாகும் தினம் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பிஜி பற்றி

நாணயம் – பிஜியன் டாலர்

தலைநகரம் – சுவா

ஜனாதிபதி- ஜியோஜி கொன்ரோட்

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

கேலோ இந்திய குளிர்கால விளையாட்டு 2021!!

  • 2வது கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு 2021 கடந்த பிப்ரவரி 26ம் தேதி தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி.
  • ஐந்து நாட்கள் நடைபெறும் கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில், 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
  • இந்த போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி 11 தங்கம், 3 வெள்ளி மற்றும் 5 வெங்கல பதக்கங்களை வென்றுள்ளது. கர்நாடகா 5 தங்கம், 4 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது, உத்தரகாண்ட் 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.

தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் 2021 துவங்கவுள்ளது!!

  • இந்தியாவில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இந்த ஆண்டு கொரோனா சூழல் காரணமாக தள்ளி போய் உள்ளது. இந்த போட்டிகள் வரும் மார்ச் 10 முதல் 18 ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சிம்டேகா என்ற மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
  • இளம் ஆடவர் பிரிவிற்கான ஹாக்கி போட்டிகள் ஹரியானா மாநிலத்தின் நார்வானா மாவட்டத்தில் 17 மார்ச் முதல் 25 மார்ச் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உருது அகாடமி துணை தலைவராக முகம்மது நையீமூர் ரஹ்மான் நியமனம்!!

  • தமிழகத்தின் உயர்கல்வி துறை சார்பாக நடத்தப்படும் உருது அகாடமியின் தலைவராக முகம்மது நையீமூர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். அகாடமியின் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது தவிர இந்த அகாடமியின் பதிவாளர் உட்பட 15 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக 12 எஸ்எஸ்பி படைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்!!

  • பூடான், நேபாளம் எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த புதிதாக 13 ஆயிரம்   படை வீரர்களுடன் 12 எஸ்எஸ்பி படைகளை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு ஆனதில் இந்த படைப்பிரிவில் புதிதாக 3 குழுக்கள் சேர்க்கப்படும்.
  • இந்த ஆண்டும் இந்த படைப்பிரிவுகளை செக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. புதிதாக சேர்க்கப்படும் படைப்பிரிவுகள் இந்தியா, சிக்கிம் எல்லை பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது இந்த எல்லையில் பாதுகாப்பு பணியில் 90 ஆயிரம் வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!