Daily Current Affairs March 2,3 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

0

Daily Current Affairs March 2,3 2021 In Tamil – TNPSC / SSC/ Railway (Nadappu Nigalvugal)

Top Current Affairs March 2021 in Tamil for Daily, Monthly & Yearly. Here We have provided Today Important Current Affairs, Daily Updated Events & Latest Current Affairs in Tamil for TNPSC,TN Police, TNFUSRC, TNEB, TNPCB, Railway, SSC, Banking, UPSC Examinations. Our Tamil Current Affairs Covers National Current Events, Economy, Defense, International Affairs etc., Current Affairs Pdf is very use full to all Competitive Exams. So those who want to clear the Examination can get updated daily current affairs in our blog. Prepare Well for the Upcoming Examination….!

தினசரி நடப்பு நிகழ்வுகள் – 02 & 03 மார்ச் 2021

தேசிய நிகழ்வுகள்

2021 கடல்சார் இந்தியா உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்!!

  • “கடல்சார் இந்தியா உச்சி மாநாடு 2021″ பிரதமர் நரேந்திர மோடி, காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.  டென்மார்க் போக்குவரத்து துறை அமைச்சர் பென்னி எங்லேபிரெக்ட், குஜராத் மற்றும் ஆந்திர முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், மன்சுக் மாண்டவியா ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
  • கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் பெயரை, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம் என பெயர் மாற்றியதன் மூலம் கடல்சார் துறையின் வரம்பை அரசு விரிவாக்கியுள்ளது, அப்போதுதான் பணிகள் முழு அளவில் நடக்கும்  என பிரதமர் உரை நிகழ்த்தினார்.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் தொடர்பான பட்ஜெட் விதிகள் குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரை!!

  • வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்  தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
  • இந்த இணைய கருத்தரங்கில், வேளாண்துறை, பால்வளத்துறை, மீன்வளத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத்துறை மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். மத்திய வேளாண்துறை அமைச்சரும் இந்த இணைய கருத்தரங்கில் பங்கேற்றார்.
  • இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, மீன்வளத்துறைக்கு முன்னுரிமையுடன், வேளாண் கடன் இலக்கை ரூ.16,50,000 கோடியாக உயர்த்தியது,  ஊரக கட்டமைப்பு நிதியை ரூ.40,000 கோடியாக உயர்த்தியது, சொட்டு நீர் பாசனத்துக்கான நிதி ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்கியது குறித்தும் உரை நிகழ்த்தினார்.

மாநில நிகழ்வுகள்

சத்தீஸ்கர் மாநிலத்தில் புதிதாக 13 திருநங்கைகள் காவலர்களாக நியமனம்!!

  • சத்தீஸ்கர் மாநிலத்தின் காவல்துறை காவலர் பணிக்கு புதிதாக 13 திருநங்கைகளை நியமித்துள்ளது. இதனை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
  • 2019 – 2020 ஆண்டிற்கான காவலர் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. அதில் கான்ஸ்டபிள் பணிக்கு 13 திருநங்கைகள் தேரசு செய்யப்பட்டுள்ளனர். 13 திருநங்கைகளும் சத்தீஸ்கர் மாநிலத்தின் 4 மாவட்டங்களில் காவலர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.
  • தற்போது வரை இந்தியாவில் உள்ள தமிழகம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டுமே திருநங்கைகள் காவலர்களாக உள்ளனர்.

சத்தீஸ்கர் பற்றி

முதல்வர் – பூபேஷ் பாகேல்

ஆளுநர்- அனுசுயா யுகே

தலைநகரம் – ராய்ப்பூர்

அரியானா மாநில மக்களுக்கு தனியார் துறை வேலைவாய்ப்பில் 75% இட ஒதுக்கீடு!!

  • உள்ளூர் இளைஞர்களுக்கு தனியார் துறை நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு அரியானா கவர்னர் சத்யதேவ் நாராயண் ஆர்யா (Satyadev Narayan Arya) ஒப்புதல் அளித்தார்.
  • இந்த மசோதா மூலமாக ஹரியானா மாநில இளைஞர்களுக்கு தனியார் வேலைகளில் 75 சதவீத வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த மசோதா கடந்த ஆண்டு நவம்பரில் அரியானா அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டது, மேலும் இது 2019 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது ஆளும் கூட்டணி பங்குதாரர் துஷ்யந்த் சவுதலா தலைமையிலான ஜன்னாயக் ஜனதா கட்சி அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

ஹரியானா பற்றி

தலைநகரம் – சண்டிகர்

முதல்வர்- மனோகர் லால் கட்டர்

ஆளுநர்- சத்யதேவ் நாராயண் ஆர்யா

நியமனங்கள்

பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு ஜெய்தீப் பட்நகர் பொறுப்பேற்பு!!

  • பத்திரிகை தகவல் அலுவலகத்தின் முதன்மை தலைமை இயக்குநராக திரு ஜெய்தீப் பட்நகர் இன்று பொறுப்பேற்றார்.
  • ஜெய்தீப் பட்நகர் 1986ம் ஆண்டு இந்திய தகவல் பணி  அதிகாரி. இவர், இதற்கு முன்பு தூர்தர்ஷன் நியூஸ் சேனலின் வர்த்தகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.
  • 20 நாடுகள் உள்ளடக்கிய மேற்கு ஆசியாவுக்கான பிரசார் பாரதி சிறப்பு நிருபராகவும் இவர் பணியாற்றியுள்ளார். அதன் பின் அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவுகளுக்கு தலைமை ஏற்றார்.

கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரியாக வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் பொறுப்பேற்பு!!

  • கடற்படை கிழக்கு மண்டல தலைமை அதிகாரி பொறுப்பை வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயினிடமிருந்து, வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங் ஏற்றுக் கொண்டார்.
  • கிழக்கு மண்டல கடற்படை தளத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதூர் சிங், கிழக்கு மண்டல கடற்படையின் பல பிரிவுகளையும் ஆய்வு செய்தார். இதில் கடற்படை உயர் அதிகாரிகள், போர்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களின்  தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
  • அஜேந்திர பகதூர் சிங் கடற்படையில் 1983ம் ஆண்டு சேர்ந்தார். நேவிகேஷன் நிபுணரான இவர், கடற்படையில் கடந்த 38 ஆண்டு காலமாக பல பதவிகளை வகித்துள்ளார். ஐஎன்எஸ் விராட், வீர், விந்தயகிரி, திரிசூல் போன்ற கடற்படை கப்பல்களில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

Download TNPSC Notification 2021 

விளையாட்டு நிகழ்வுகள்

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்கள் விராட் கோலி சாதனை!!

  • இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார்.
  • இன்ஸ்டாகிராமில் 10 கோடி பாலோயர்களை கடந்த  முதல் இந்தியர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிகம் பின்தொடருபவர்களில்  நான்காவது விளையாட்டு வீரர் கோலி  ஆவார்.இன்ஸ்டாகிராமில் 7.5 கோடி பின்தொடர்பவர்களை பெற்ற முதல் ஆசியர் என்ற பெருமையை கோலி பெற்றார்.
  • இன்ஸ்டாகிராம் தவிர, டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற பிற சமூக ஊடக தளங்களிலும் கோலியை அதிக  ரசிகர்களைப் பின் தொடர்கிறார்கள்.

97 வது லாட்வியன் நீச்சல் போட்டியில் இந்திய வீரர்கள் 1 தங்கம், 3 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்!!

  • லவிட்டன் நீச்சல் போட்டியில் இந்தியாவின் சார்பில் மூன்று பேர் கலந்து கொண்டதில், ஒரு தங்கம் மற்றும் 2 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர்.
  • ஜன் பிரகாஷ் என்பவர் 200 மீட்டர் ஆண்கள் பட்டர்பிளை நீச்சல் போட்டியில் தங்க பதக்கத்தை வென்றார். தனிஷ் மற்றும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் ஆகியோர் பட்டர்பிளை மற்றும் ஃப்ரீ ஸ்டைல் போட்டிகளில் கலந்து கொண்டு 2 வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

பிற நிகழ்வுகள்

எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ள புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டம்!!

  • எஸ்பிஐ வங்கி தங்களது வாடிக்கையாளர்களுக்கு என்று புதிதாக ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் இந்திய மதிப்பில் பணத்தினை வரவு வைத்தால் அது டாலர்களாக மாறிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.
  • இதற்கு ஒரு வாடிக்கையாளர் குறைந்தபட்சம் 5000 ரூபாயை வரவு வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ பற்றி

தலைவர் – வினய்

நிறுவகிக்கப்பட்டது – 1987

ரூ.18,699 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரம் வாங்கியது ஏர்டெல்!!

  • சமீபத்திய ஸ்பெக்ட்ரம் ஏலத்தில், ரூ.18,699 கோடி மதிப்புள்ள ரேடியோவேவ்ஸை வாங்கியுள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல் தெரிவித்துள்ளது.
  • ஸ்பெக்ட்ரம் அனைத்தும் எதிர்காலத்தில் ஏர்டெல் 5 ஜி சேவைகளை வழங்க உதவும். ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஏழு பேன்ட்களில் ரூ.4 லட்சம் கோடி மதிப்புள்ள மொத்தம் 2308.80 MHz ஸ்பெக்ட்ரத்தின் ஏலம் இரண்டாவது நாளில் நிறைவடைந்தது.

ஏர்டெல் பற்றி

தலைமை நிர்வாக அதிகாரி – கோபால் விட்டல்

தலைமையகம்- புது டெல்லி

Download CA Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!